Posts

Moon Worship

Image
*பாபிலோனிலே குறிப்பிட்ட ஒரு நாளில் உயரமான பனை மரத்தை போன்ற ஒரு மரத்தை தங்களது விக்கிரக கோயிலருகில் நட்டு வைத்து அதன் மீது ஓலைகளை கட்டி அதனை தீக்கொளுத்தி விடுவர். இதன் நம்பிக்கை என்னவென்றால் சொர்க்கத்திற்கு செல்லத்தகுதியில்லாத ஆத்துமாக்கள் தன்னை அக்கினியில் செலுத்தி தன்னுடைய ஆத்துமாவை சொர்க்கம் செல்ல சுத்திகரித்து கொண்டு அங்கு எழும் புகை தூபத்தில் ஏறி சொர்க்கத் தேவதையின் அனுமதியோடு சொர்க்கம் செல்கிறது என்பதாகும்.* *பணியாரம் சுடும் மற்றும் பானபலி(குழம்பு) செய்யும் திருவிழா:* இதற்கு இணையான செயல்பாடு பரிசுத்த வேதத்தில் எரேமியா 7:18ல் அன்று கர்த்தருடைய ஜனங்கள் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் *எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்;அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள் என்று கர்த்தர் மனம் குமுறுகிறதைக் காண்கிறோம்.* எரேமியா 44:17ல் *வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், ...